டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தற்போது லியோ படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தை அடுத்து மூன்று ஆண்டுகள் விஜய் நடிப்பில் இருந்து விலகி இருக்கப் போவதாக கூறப்படும் நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் தற்போது விஜய் வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த மாதம் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய விஜய், அதன் பிறகு காமராஜர் பிறந்த நாளில் இரவு பாடசாலை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்டா மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று மக்களிடத்தில் ஒரு சர்வே நடத்தி உள்ளார்கள். அதில், 70 சதவீத மக்கள் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களாம் . இந்த சர்வே முடிவு விஜய் வட்டாரத்திற்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.




