மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தற்போது லியோ படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தை அடுத்து மூன்று ஆண்டுகள் விஜய் நடிப்பில் இருந்து விலகி இருக்கப் போவதாக கூறப்படும் நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் தற்போது விஜய் வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த மாதம் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய விஜய், அதன் பிறகு காமராஜர் பிறந்த நாளில் இரவு பாடசாலை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்டா மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று மக்களிடத்தில் ஒரு சர்வே நடத்தி உள்ளார்கள். அதில், 70 சதவீத மக்கள் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களாம் . இந்த சர்வே முடிவு விஜய் வட்டாரத்திற்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.