குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? |
நடிகை சமந்தா 'மயோசிடிஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவர் தன் கைவசம் இருந்த படங்களை நடித்து முடித்து விட்டார், புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. வெளிநாட்டிற்கு சென்று 6 மாதங்கள் சிகிச்சையும், ஓய்வும் எடுக்க இருக்கிறார். இந்த 6 மாதங்கள் என்பது மேலும் நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ரசிகர்கள், திரையுலகினர் அவர் பூரண நலம் பெற்றும் மீண்டும் புதிய பலத்துடன் அவர் நடிக்க வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
சிகிச்சைக்கு செல்வதற்கு முன் சமந்தா முக்கிய கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபுரம் தங்க கோவிலில் வழிபாடு நடத்தினார். பழனிக்கு சென்று வழிபட்டார். அடுத்ததாக அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
“பண்ணாரி அம்மன் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு நடிகைகள் தரிசனத்துக்கு வருவது மிகவும் குறைவு. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தால் வருவார்கள். ஆனால் சமந்தா சாமி தரிசனத்திற்காகவே வந்தார். மனமுருகி பிரார்த்தனை செய்தார். சக்தி வாய்ந்த அம்மன் சமந்தாவுக்கு பூரண உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் தருவாள்” என்றார் கோவில் பூசாரி.