மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை சமந்தா 'மயோசிடிஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவர் தன் கைவசம் இருந்த படங்களை நடித்து முடித்து விட்டார், புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. வெளிநாட்டிற்கு சென்று 6 மாதங்கள் சிகிச்சையும், ஓய்வும் எடுக்க இருக்கிறார். இந்த 6 மாதங்கள் என்பது மேலும் நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ரசிகர்கள், திரையுலகினர் அவர் பூரண நலம் பெற்றும் மீண்டும் புதிய பலத்துடன் அவர் நடிக்க வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
சிகிச்சைக்கு செல்வதற்கு முன் சமந்தா முக்கிய கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபுரம் தங்க கோவிலில் வழிபாடு நடத்தினார். பழனிக்கு சென்று வழிபட்டார். அடுத்ததாக அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
“பண்ணாரி அம்மன் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு நடிகைகள் தரிசனத்துக்கு வருவது மிகவும் குறைவு. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தால் வருவார்கள். ஆனால் சமந்தா சாமி தரிசனத்திற்காகவே வந்தார். மனமுருகி பிரார்த்தனை செய்தார். சக்தி வாய்ந்த அம்மன் சமந்தாவுக்கு பூரண உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் தருவாள்” என்றார் கோவில் பூசாரி.