Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பண்ணாரி அம்மன் கோவிலில் சமந்தா வழிபாடு

20 ஜூலை, 2023 - 12:08 IST
எழுத்தின் அளவு:
Samantha-worship-at-Bannari-Amman-temple

நடிகை சமந்தா 'மயோசிடிஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவர் தன் கைவசம் இருந்த படங்களை நடித்து முடித்து விட்டார், புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. வெளிநாட்டிற்கு சென்று 6 மாதங்கள் சிகிச்சையும், ஓய்வும் எடுக்க இருக்கிறார். இந்த 6 மாதங்கள் என்பது மேலும் நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ரசிகர்கள், திரையுலகினர் அவர் பூரண நலம் பெற்றும் மீண்டும் புதிய பலத்துடன் அவர் நடிக்க வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

சிகிச்சைக்கு செல்வதற்கு முன் சமந்தா முக்கிய கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபுரம் தங்க கோவிலில் வழிபாடு நடத்தினார். பழனிக்கு சென்று வழிபட்டார். அடுத்ததாக அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

“பண்ணாரி அம்மன் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு நடிகைகள் தரிசனத்துக்கு வருவது மிகவும் குறைவு. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தால் வருவார்கள். ஆனால் சமந்தா சாமி தரிசனத்திற்காகவே வந்தார். மனமுருகி பிரார்த்தனை செய்தார். சக்தி வாய்ந்த அம்மன் சமந்தாவுக்கு பூரண உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் தருவாள்” என்றார் கோவில் பூசாரி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செப்டம்பரில் அரசியல் கட்சி தொடங்கும் விஜய்!செப்டம்பரில் அரசியல் கட்சி ... வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும்: பெப்சி வேண்டுகோள் வெளிநாட்டில் படப்பிடிப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)