சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி |
தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் இயக்குனர் ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளருமான மரகதமணி, தமிழில் எம்.எம்.கீரவாணி என்கிற பெயரிலும் இசையமைத்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இவரது இசையில் சூப்பர் ஹிட்டான நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த வருடம் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தற்போது சந்திரமுகி 2 மற்றும் ஜென்டில்மேன் 2 என இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு இசையமைக்கிறார் மரகதமணி.
இதில் ஜென்டில்மேன் 2 படத்தின் பாடல் கம்போசிங் தற்போது கேரளாவில் கொச்சியில் உள்ள போல்காட்டி பேலஸில் நடைபெற்று வருகிறது. இதற்காக கேரளா வருகை தந்த இசையமைப்பாளர் மரகதமணி தான் வரும்போது தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கென கையோடு நான்கு வரிகளில் ஒரு வாழ்த்துப் பாடலையும் உருவாக்கி எடுத்து வந்திருந்தார்.
கொச்சியில் தன்னை கே.டி.குஞ்சுமோன் வரவேற்றபோது கேரளாவில் உள்ள சில கோரஸ் இசைக்கலைஞர்களை வைத்து தான் கொண்டு வந்த பாடலை இசைக்க வைத்து தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மரகதமணி.