டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் இயக்குனர் ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளருமான மரகதமணி, தமிழில் எம்.எம்.கீரவாணி என்கிற பெயரிலும் இசையமைத்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இவரது இசையில் சூப்பர் ஹிட்டான நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த வருடம் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தற்போது சந்திரமுகி 2 மற்றும் ஜென்டில்மேன் 2 என இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு இசையமைக்கிறார் மரகதமணி.
இதில் ஜென்டில்மேன் 2 படத்தின் பாடல் கம்போசிங் தற்போது கேரளாவில் கொச்சியில் உள்ள போல்காட்டி பேலஸில் நடைபெற்று வருகிறது. இதற்காக கேரளா வருகை தந்த இசையமைப்பாளர் மரகதமணி தான் வரும்போது தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கென கையோடு நான்கு வரிகளில் ஒரு வாழ்த்துப் பாடலையும் உருவாக்கி எடுத்து வந்திருந்தார்.
கொச்சியில் தன்னை கே.டி.குஞ்சுமோன் வரவேற்றபோது கேரளாவில் உள்ள சில கோரஸ் இசைக்கலைஞர்களை வைத்து தான் கொண்டு வந்த பாடலை இசைக்க வைத்து தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மரகதமணி.




