வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

தமிழில் பண்ணையாரும் பத்மினியும், ஒருநாள் கூத்து உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். அடுத்தடுத்து பெரிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்ற இவர், விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு உயர்ந்தார். சமீபத்தில் மலையாளத்தில் பஹத் பாஸில் நடிப்பில் வெளியான பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜஸ்டின் பிரபாகரன்.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி எனும் மரகதமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜஸ்டின் பிரபாகரன் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். மேலும் விஜய் தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட் என்கிற படத்தில் இடம்பெற்ற காதலே என்கிற பாடல் தன் மனதுக்கு மிக நெருக்கமான பாடல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பாச்சுவும் அற்புத விளக்கும் படத்திலும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை சிறப்பான பங்கு வகித்தது என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். “மூத்த இசையமைப்பாளரும் மிகப்பெரிய ஜாம்பவானுமான உங்களிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைப்பது என்னை மென்மேலும் சிறப்பாக பயணிக்க உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கிறது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.




