அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சினிமாவில் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமானவர் அந்தோனிதாசன். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அந்தோணிதாசன் மனைவியின் தங்கை தான் சூப்பர் சிங்கர் பிரபலமலான ராஜலெட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அந்தோணிதாசன், ‛‛இந்த காலத்தில் பாடல்களை எழுதிய பாடகர்களின் தகவல்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. பாடுகிறவர்களும் இந்த பாடலை எழுதியவர்கள் இன்னார் தான் எழுதினார்என்று சொல்வதில்லை. எங்களுடைய அடையாளங்களை வாங்கி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
என் மனைவி எழுதிய பாடலை தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலெட்சுமி பாடியுள்ளனர். அந்த பாடல் பாடியதன் மூலம் பாராட்டுகளையும் புகழையும் பெற்ற ராஜலெட்சுமி எந்த இடத்திலும் அந்த பாடலை எழுதியது தனது சகோதரி தான் என்று கூறவில்லை. இதனால், அந்த பாடலே செந்தில் - ராஜலெட்சுமியுடையது என்றாகிவிட்டது என்று வருத்தத்துடன் பேசி உள்ளார்.