25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழ் சினிமாவின் முதல் பெண், முதல் ஆளுமை என்றால் அது டி.பி.ராஜலட்சுமிதான். ஊமை படத்தின் காலத்தில் முதல் நாயகியாக அறிமுகமானார். 1929ம் ஆண்டு அவர் நடித்த 'கோவலன்' என்ற ஊமைப் படம் வெளிவந்தது. அதன் பிறகு 'உஷா சுந்தரி' என்ற ஊமைப்படத்திலும் நடித்தார். தமிழில் முதல் பேசும்படமான 'காளிதாஸ்' நாயகியும் டி.பி.ராஜலட்சுமிதான்.
1936ல் 'மிஸ் கமலா' படத்தினை அவரே சொந்தமாகத் தயாரித்தார். அதனால், தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. அந்தப் படத்தை அவரே இயக்கினார். தமிழின் முதல் பெண் இயக்குநர் எனும் பெயரும் அவரையே வந்து சேர்ந்தது. இந்த படத்திற்கு அவரே திரைக்கதை வசனம் எழுதினார். இசை அமைத்தார். இதன் மூலம் முதல் பெண் திரைக்கதை ஆசிரியர், கதாசிரியர், இசை அமைப்பாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அதனால் இவரை 'குயின் ஆஃப் தமிழ் சினிமா' என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தஞ்சாவூருக்கு அருகே திருவையாறு எனும் ஊரில் பஞ்சாபகேச அய்யருக்கும் மீனாட்சியம்மாளுக்கும் பிறந்த மகள் தான் ராஜலட்சுமி. ராஜலட்சுமிக்கு எட்டு வயதிருக்கும்போதே திருமணமாகி விட்டது. திருமணமாகிப் புகுந்தவீடு போன ராஜலட்சுமியை வரதட்சணைக் கொடுமை பிறந்த வீட்டுக்கு திருப்பி அனுப்பியது. திடீரென தந்தை இறந்து விட குடும்பத்தை காப்பாற்ற திருச்சி சாமாண்ணா நாடக கம்பெனியில் சேர்ந்தார். அவரின் இனிமையான குரல் அவருக்கு நடிப்பு வாய்ப்பு பெற்று கொடுத்தது. அதன் பிறகு நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தார். 14 படங்களில் நடித்த ராஜலட்சுமி, 1943ல் மரணம் அடைந்தார்.