300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
250 படங்களுக்கு மேல் நடித்த ஹீரோயின் வெண்ணிற ஆடை நிர்மலா. சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அந்த நேரத்தில் அவர் தனது குடும்பத்துடன் கேரளாவிற்கு குடும்ப விழா ஒன்றுக்காக சென்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கார் புணலூர் அருகே வந்தபோது விபத்தில் சிக்க, நிர்மலா கண் முன்னால் அவரது அண்ணன் துடிதுடித்து இறந்தார்.
சென்னை கொண்டு வரப்பட் நிர்மலா இங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் நிர்மலாவை மருத்துவமனையில் சந்தித்து அவரது சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார். அவருக்கு ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர், “உனது அண்ணன் இறந்து விட்டாலும் கடவுள் உன்னை காப்பாற்றி இருப்பது ஏன் தெரியுமா, உன் கடமையில் நீ எதையோ பாக்கி வைத்திருக்கிறாய். அந்த பாக்கி கலை. அதை செய்” என்றார். இந்த வார்த்தைகளால் உற்சாகம் அடைந்த நிர்மலா மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
அதன்பிறகு நிர்மலா எம்ஜிஆர் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்தார். குறிப்பாக ஜானகியை அம்மா என்றே அழைப்பார். எம்.ஜி.ஆர் வீட்டு சமையல் வேலைகளில்கூட ஜானகிக்கு உதவி செய்வார். பின்னாளில் எம்ஜிஆர் வற்புறுத்தல் காரணமாக அதிமுக.,வில் இணைந்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகியால் போடி தொகுதியில் வேட்பாளராக நிற்க வைக்கப்பட்டார். ஜானகி மறைந்ததும் நிர்மலாவும் அதிமுகவை விட்டு விலகினார். பின்னாளில் பா.ஜ., கட்சியில் சேர்ந்தார்.