'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' |
நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரியில் நாயகனாக நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் அவருக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த குணசித்ர வேடத்தில் நடித்த மாமன்னன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. தற்போது வரை 50 கோடி வசூலித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முக்கியமாக வடிவேலுவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருப்பதோடு வித்தியாசமான வடிவேலுவை மாரி செல்வராஜ் திரையில் கொண்டு வந்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், மறுபிரவேசத்தில் மாமன்னன் படத்தின் மூலம் வெற்றி பாதையை நோக்கி மீண்டும் திரும்பி இருக்கிறார் வடிவேலு. இந்த நிலையில் அடுத்தபடியாக லைப் இஸ் பியூட்டிபுல் என்ற இத்தாலியன் படத்தை வடிவேலுவை நாயகனாக வைத்து ரீமேக் செய்யப் போகிறாராம் மாரி செல்வராஜ். இந்த தகவலை வடிவேலுவே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்த படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கும் வடிவேலு, மாமன்னனை போலவே அந்த படமும் என்னை மீண்டும் வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.