மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், அடுத்தபடியாக பார்த்திபன் ‛டீன்' என்ற பெயரில் 13 முதல் 15 வயதுடைய சிறுவர்கள் சம்பந்தப்பட்ட கதையில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திற்கு இசையமைக்க அவர் ஏ. ஆர். ரகுமானை தொடர்பு கொண்டபோது, தற்போது வேலைப்பளு அதிகமாக இருப்பதால் தற்போதைக்கு உங்கள் படத்துக்கு இசையமைக்க முடியாது என்று தெரிவித்தவர், பார்த்திபன் இயக்கும் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் அந்த பதிவை தொடர்ந்து தனது டுவிட்டரில் பார்த்திபன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், பழகுதல் காதலால் விலகுதலும் காதலால் ஆதலால், ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம். இறுதிவரை வரும் படத்திலும் இருவரும் இணைவோம் என நினைத்து இயலாதபோது நண்பர் ஏஆர்ஆர் அவரிடமிருந்து வந்த மிருது மெயில் என்று பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.