ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகர் சபீர். அதன் பிறகு திரிஷா நடித்துள்ள தி ரோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இதையடுத்து, விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் சபீர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பர்த்மார்க் என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாக மிர்னா நடிக்கிறார். தற்போது இவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்
படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறும்போது, 'பர்த்மார்க்' கதை ஒரு மிஸ்ட்ரி - டிராமாவாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை. இதில், டேனியல் (அ) டேனியாக ஷபீர் கல்லாரக்கல் மற்றும் ஜெனிபராக மிர்னா நடிக்கிறார். இந்த கதை 90களில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் சில மர்மங்கள் மற்றும் சஸ்பென்ஸ் உள்ளது. ஆனால், அதைவிட எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
குழந்தை பிறக்கும் செயல்முறை ஆண்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல. உடல்ரீதியான சவால்கள் தாண்டி மனரீதியாக பெண்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் குறித்தும் பேசப்பட வேண்டும். இது போன்றதொரு காலக்கட்டத்தில் தன் மனைவியுடன் கணவன் வரும்போது அவன் மீண்டும் பிறக்கிறான். மேலும், இது தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை அவனுக்கு ஏற்படுத்துகிறது" என்றார்.