பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ரஜினி நடித்து வரும் சில காட்சிகளின் புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் கசிந்து வருவதை அடுத்து பலத்த செக்யூரிட்டி போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, தமன்னா உள்பட பல நடித்து வரும் நிலையில் தற்போது மிர்னா மேனன் என்ற மலையாள நடிகையும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் பிக் பிரதர் என்ற படத்தில் நடித்துள்ள இவர், தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் பட்டதாரி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மிர்னா என்ற பெயரில் தமிழில் புர்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க இருந்த வேடத்தில் மிர்னா மேனன் நடிப்பதாக கூறப்படுகிறது.