25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
கோல்கட்டாவில் இருந்து கடந்த வாரம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 275க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வர அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றார்கள். ஆனபோதிலும் அங்கு பிரதமர் வர இருந்ததால் விபத்து நடைபெற்ற பகுதியை பார்வையிட முடியாமல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை மட்டும் சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி அவருக்கு எதிராக ஒரு விமர்சனம் வெளியிட்டுள்ளார். அதில், 'சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைச்சர் உதயநிதி தன்னை மாற்றிக் கொள்கிறார். ரயில் விபத்து மீட்பு பணிகள் குறித்து ஒட்ட முடியாத தங்களது கட்சியின் ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறார்' என டுவிட்டரில் பதிவிட்டுளளார்.