மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வெற்றிமாறன் இயக்கி உள்ள விடுதலை படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார் சூரி. முதல்பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்தபாகம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. தற்போது கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு மேலும் சில படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றார் சூரி. அப்போது தனது ரசிகர் ஒருவரின் தாயார் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தவர் ஒரு ஆட்டோவில் அவரது வீட்டுக்கு சென்று உடல் நலம் விசாரித்து இருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் ஆட்டோவில் தனது வீட்டுக்கு வந்துள்ளார் சூரி. ‛‛என்னுடைய ரசிகரின் அம்மா எனது அம்மா மாதிரி. அதனால்தான் நேரில் உடல் நலம் விசாரிக்க வந்தேன்'' என்று நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார் சூரி. அவர் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.