அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் ஆர்ஆர்ஆர். மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்த படம் அமைந்ததுடன் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டு நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதையும் வென்றது. இந்த நிலையில் நடிகர் ராம்சரனை வைத்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அவரது முதல் ஹிந்தி படமான ஜஞ்சீர் என்கிற படத்தை இயக்கிய அபூர்வ லகியா என்கிற இயக்குனர் ராம்சரண் பற்றியும் ஆர்ஆர்ஆர் படத்தில் பணியாற்ற தன்னை அழைத்தது குறித்தும் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் ராம்சரண் பற்றி கூறும்போது, “ஜஞ்சீர் படம் ஆரம்பித்ததில் இருந்தே நானும் ராம்சரணும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். அந்த படம் சரியாக போகாவிட்டாலும் கூட அவர் என்னுடன் தொடர்ந்து நல்ல நட்பில் இருந்தார். ஐதராபாத் செல்லும்போது தவறாமல் அவரது வீட்டிற்கு சென்று வருவேன். அதே சமயம் கடந்த சில வருடங்களாக பெரும்பாலும் நான் போன் செய்தால் அவர் எடுக்கவே மாட்டார். சரியான நேரத்தில் அவரிடம் இருந்து பதிலும் வராது.
அவர் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வந்த சமயத்தில் திடீரென ஒரு நாள் அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது உக்ரைனில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ராம்சரண், உங்களுக்கு ஏதாவது பெரிய வேலை இருக்கிறதா.. ஏனென்றால் இங்கே இரண்டு மூன்று ஆக்சன் காட்சிகளை படமாக்குவதற்கு இரண்டாவது யூனிட் இயக்குனராக பணிபுரிய வேண்டும். உங்களால் முடியுமா ? செய்து தருவீர்களா ? என்று கேட்டார்.
நான் சம்மதம் தெரிவித்து விரைவில் அதுகுறித்து உங்களிடம் தொடர்பு கொள்கிறேன் என்று கூறினேன். அதன் பிறகு மீண்டும் என்னை அழைத்த அவர் உங்களால் உடனே முடியுமா என்று கேட்டார். அப்போது எனக்கு சில வேலைகள் இருந்தன. அதனால் அந்த சமயத்தில் ராம்சரணின் கோரிக்கையை ஏற்க முடியாமல் போனது” என்று கூறியுள்ளார்.