ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சொந்த வாழ்வில் ஏற்பட்ட சோகங்களுக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பாவனா தற்போது பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார். பிங்க் நோட், கேஸ் ஆப் கொன்டனா என்ற கன்னட படங்களிலும் 'ஹன்ட்' என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரகுமானுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி உள்ளது. இதில் ரகுமான் போலீஸ் அதிகாரியாகவும், பாவனா தடயவியல் மருத்துவராகவும் நடிக்கிறார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். புதுமுக டைரக்டர் ரியாஸ் மாரத் டைரக்டு செய்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தை அதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.