பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழில் 'சித்திரம் பேசுதடி, தீபாவளி' உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் மலையாளத்தில் அறிமுகமான சமயத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, பிரித்விராஜ் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தார். அதில் குஞ்சாக்கோ போபன், பாவனா ஜோடி ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக மாறியது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து எதிர்பாராத விதமாக தங்களது பயணத்திற்காக வந்த இடத்தில் விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள குஞ்சாக்கோ போபன் கூறும்போது, “நான் என்னுடன் நடித்த முதல் படத்திலிருந்து ஒரு பப்ளி பெண்ணாக பார்த்து வந்த நடிகை பாவனாவுடன் எதிர்பாராத விதமான ஒரு சந்திப்பு இது. வாழ்க்கையில் ஏற்பட்ட மேடு பள்ளங்களையும் பிரச்னைகளையும் தைரியமாக எதிர்கொண்டு வரும் அவரைப் பார்க்கும்போது இதயம் நெகிழ்ந்தது” என்று கூறியுள்ளார். குஞ்சாக்கோ போபனும் பாவனாவும் 'சொப்பனக்கூடு, ஹிருதயத்தில் சூக்ஷிக்கான், டாக்டர் லவ்' உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.