மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
மலையாள திரையுலக நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் புதிய தேர்தல் நடைபெற்றது. இந்த முறை முதன்முறையாக ஒரு பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக இயங்கிவந்த நடிகர் சங்க நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்த பலர் குறிப்பாக சில முன்னணி நடிகைகள் சிலர் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறினார்கள். அந்த வகையில் கடந்த 2017ல் தனக்கு ஏற்பட்ட ஒரு பாதிப்புக்கு நடிகர் சங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய நடிகை பாவனா நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறினார்.
தற்போது புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்வேதா மேனனிடம் அவரை மீண்டும் நடிகர் சங்கத்திற்கு அழைத்து வர முயற்சி எடுக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்வேதா மேனன் அவர் மட்டுமல்ல, நடிகர் சங்கத்திலிருந்து பல காரணங்களால் விலகிச் சென்ற அனைவரையுமே சங்கத்திற்கு மீண்டும் வரவேற்கிறோம். அவர்களை அழைத்து வர முயற்சிப்போம். ஆனால் அது ஒரே மீட்டிங்கில் முடியுமா என்பது சொல்ல முடியாது. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட மீட்டிங்குகள் நடத்திய பிறகு தான் தெரிய வரும். ஆனால் தற்போதைய முக்கிய அஜண்டா அதுவா என்றால் இல்லை என்று கூறியிருந்தார்.
இது குறித்து நடிகை பாவனாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் நடிகர் சங்கத்தில் பல வருடமாக உறுப்பினராக இல்லை. அதனால் தற்போது நடிகர் சங்கத்தில் நடைபெற்ற மாற்றம் குறித்து எனக்கு தெரியவில்லை. சூழல் ஏற்பட்டால் அது குறித்து பேசுவேன்” என்று கூறியுள்ளார்.