ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
சரத்குமார் தற்போது இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் அவர் விதார்த்துடன் இணைந்து நடிக்கும் படம் 'சமரன்'. எம்360டிகிரி ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படத்தை திருமலை பாலுச்சாமி இயக்குகிறார். மலையாள நடிகர் ஆர். நந்தா வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடிக்கின்றனர். குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், வேத் சங்கர் சுகவனம் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் திருமலை பாலுச்சாமி கூறியதாவது: ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஐஏஎஸ் அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி சஸ்பென்ஸ் கதையே 'சமரன்' படம். சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால் பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை உருவாக்கும் சூழலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. அதை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்களா என்பதுதான் கதை.
முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று மணலியில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் அதிரடி காட்சிகள். இது படத்தில் பேசப்படுவதாக இருக்கும்.