சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
கன்னடத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'காந்தாரா' திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய சாதனையைப் படைத்தது. தற்போது 'காந்தாரா' படத்தின் அடுத்த பாகத்தை அதன் முன்னுரை படமாக எடுக்க உள்ளார் அதன் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி. அதற்கான எழுத்து வேலைகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.
இந்நிலையில் ரிஷப் ஷெட்டி, தனது மனைவி, குழந்தைகளுடன், கர்நாடகா மாநிலம், தர்மஸ்தலா மஞ்சுநாதேஷ்வரா, மங்களூர் அருகில் உள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி ஆகிய கோவில்களில் குடும்பத்துடன் வழிபாடு நடத்தி உள்ளார். அது பற்றிய புகைப்படங்களை அவரது மனைவி பிரகதி பகிர்ந்துள்ளார். தங்களது குழந்தைகளுக்கு முடி காணிக்கையும் செலுத்தி உள்ளார்கள்.
“சமீபத்தில் நாங்கள் குடும்பத்துடன் தர்மஸ்தலா, குக்கி சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசித்து ஆசி பெற்றோம்,” என பிரகதி குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவின் தெற்குப் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் மஞ்சுநாதேஸ்வரா என அழைக்கப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் கோவில் உள்ளது. கர்நாடகாவின் மங்களூர் அருகில் குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. குமாரமலை என்றழைக்கப்படும் அங்குதான் இந்திரன் மகளான தெய்வானையை முருகன் மணம் புரிந்தார் என்பது ஐதீகம்.