திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கன்னடத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'காந்தாரா' திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய சாதனையைப் படைத்தது. தற்போது 'காந்தாரா' படத்தின் அடுத்த பாகத்தை அதன் முன்னுரை படமாக எடுக்க உள்ளார் அதன் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி. அதற்கான எழுத்து வேலைகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.
இந்நிலையில் ரிஷப் ஷெட்டி, தனது மனைவி, குழந்தைகளுடன், கர்நாடகா மாநிலம், தர்மஸ்தலா மஞ்சுநாதேஷ்வரா, மங்களூர் அருகில் உள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி ஆகிய கோவில்களில் குடும்பத்துடன் வழிபாடு நடத்தி உள்ளார். அது பற்றிய புகைப்படங்களை அவரது மனைவி பிரகதி பகிர்ந்துள்ளார். தங்களது குழந்தைகளுக்கு முடி காணிக்கையும் செலுத்தி உள்ளார்கள்.
“சமீபத்தில் நாங்கள் குடும்பத்துடன் தர்மஸ்தலா, குக்கி சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசித்து ஆசி பெற்றோம்,” என பிரகதி குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவின் தெற்குப் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் மஞ்சுநாதேஸ்வரா என அழைக்கப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் கோவில் உள்ளது. கர்நாடகாவின் மங்களூர் அருகில் குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. குமாரமலை என்றழைக்கப்படும் அங்குதான் இந்திரன் மகளான தெய்வானையை முருகன் மணம் புரிந்தார் என்பது ஐதீகம்.