கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்கும் மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
கன்னடத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'காந்தாரா' திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய சாதனையைப் படைத்தது. தற்போது 'காந்தாரா' படத்தின் அடுத்த பாகத்தை அதன் முன்னுரை படமாக எடுக்க உள்ளார் அதன் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி. அதற்கான எழுத்து வேலைகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.
இந்நிலையில் ரிஷப் ஷெட்டி, தனது மனைவி, குழந்தைகளுடன், கர்நாடகா மாநிலம், தர்மஸ்தலா மஞ்சுநாதேஷ்வரா, மங்களூர் அருகில் உள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி ஆகிய கோவில்களில் குடும்பத்துடன் வழிபாடு நடத்தி உள்ளார். அது பற்றிய புகைப்படங்களை அவரது மனைவி பிரகதி பகிர்ந்துள்ளார். தங்களது குழந்தைகளுக்கு முடி காணிக்கையும் செலுத்தி உள்ளார்கள்.
“சமீபத்தில் நாங்கள் குடும்பத்துடன் தர்மஸ்தலா, குக்கி சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசித்து ஆசி பெற்றோம்,” என பிரகதி குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவின் தெற்குப் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் மஞ்சுநாதேஸ்வரா என அழைக்கப்படும் தங்கத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் கோவில் உள்ளது. கர்நாடகாவின் மங்களூர் அருகில் குக்கி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. குமாரமலை என்றழைக்கப்படும் அங்குதான் இந்திரன் மகளான தெய்வானையை முருகன் மணம் புரிந்தார் என்பது ஐதீகம்.