'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர்,'புஷ்பா' படத்தில் நடித்த ராஷ்மிகாவைப் பற்றி விமர்சித்துப் பேசியதாக செய்திகள் வெளிவந்தன. அது குறித்து ஐஸ்வர்யா தரப்பிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று வெளியானது. தான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டு செய்தியாக வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதைப் பற்றித் தெரிந்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆறுதல் தரும் விதத்தில் டுவீட் செய்துள்ளார் ராஷ்மிகா. அதில், “ஹாய் அன்பே, இப்போதுதான் இது பற்றி பார்த்தேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். இது பற்றி நமக்குள் எந்த விளக்கமும் தேவையில்லை என நான் நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் 'பர்ஹானா' படத்திற்கு எனது சிறப்பான, அன்பான வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவின் பதிவை ரிடுவீட் செய்து ஹாட்டின் எமோஜிகளைப் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.