புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகள், 'ஆன்லைன்' வாயிலாக துவங்கப்பட்டுள்ளன. அதற்கு உதவும் வகையில், 'இன்ஸ்டாகிராம்' வலைதளத்தில் கணக்கு துவக்கிய விஜயை, ஒன்றரை மணி நேரத்திற்குள் 10 லட்சம் பேர் பின்தொடரும் சாதனை நடந்துள்ளது.
இதில் உலக அளவில், மூன்றாம் இடத்தில் விஜய் இருக்கிறார். தற்போது, அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 64 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், வரும் 14ல், அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று, மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டம்தோறும் நடக்கும் இவ்விழாவில், அனைத்து அணி தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றும், முன்கூட்டியே போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த், நேற்று நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசியல் ஆசையோடு இருக்கும் விஜய், அதற்கு முன்னோட்டமாக தலித் சமுதாயத்தின் ஆதரவை பெறும் நோக்கில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.