மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகள், 'ஆன்லைன்' வாயிலாக துவங்கப்பட்டுள்ளன. அதற்கு உதவும் வகையில், 'இன்ஸ்டாகிராம்' வலைதளத்தில் கணக்கு துவக்கிய விஜயை, ஒன்றரை மணி நேரத்திற்குள் 10 லட்சம் பேர் பின்தொடரும் சாதனை நடந்துள்ளது.
இதில் உலக அளவில், மூன்றாம் இடத்தில் விஜய் இருக்கிறார். தற்போது, அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 64 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், வரும் 14ல், அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று, மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டம்தோறும் நடக்கும் இவ்விழாவில், அனைத்து அணி தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றும், முன்கூட்டியே போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த், நேற்று நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசியல் ஆசையோடு இருக்கும் விஜய், அதற்கு முன்னோட்டமாக தலித் சமுதாயத்தின் ஆதரவை பெறும் நோக்கில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.