பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் | லிப்லாக் காட்சி அவசியம் இல்லை ; அதிர வைக்கும் நடிகர் ஷேன் நிகம் | நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ நடிப்பில் வெளிவந்த விடுதலை திரைப்படம் தமிழில் அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இந்தப்படம் வரும் ஏப்ரல் 15 அன்று டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. அதற்காக இன்று விடுதலை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் வெற்றிமாறன்.
இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியது; ஆடுகளம் படத்திற்கு பிறகு வடசென்னை படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படத்தில் அவர் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரத்தையும் நான் நீக்கி விட்டேன்.
கொரோனோ லாக்டவுன் காலகட்டத்தில் மகேஷ் பாபுவுடன் நிறைய கதைகள் பேசினேன். அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. நான் ஸ்டார்க்காகவோ காம்பினேஷன்காக படம் பண்ண மாட்டேன். கதைக்காக படம் பண்ணுவேன். நான் யோசித்த கதைகளில் ஒரு கதையில் ஜூனியர் என்டிஆர் மாதிரி ஸ்டார் தேவைப்படுகிறது. இப்போது ஜூனியர் என்டிஆர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக படம் பண்ணுவேன். ஆனால் அதற்கு நேரம் ஆகும்".
இவ்வாறு கூறியுள்ளார்.