புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
யசோதா திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் அடுத்ததாக, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சாகுந்தலம். புராண கால கதையான சாகுந்தலத்தை தழுவி உருவாகியுள்ள இந்த படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை பிரபல தெலுங்கு கமர்ஷியல் இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா.
அப்படி ஒரு நிகழ்வில் சமீபத்தில் அவர் பேசும்போது,”இந்த படத்திற்காக தினசரி எனது கைகளில் மலர்களை சுற்றியவாறு நடிக்க வேண்டி இருந்தது. படப்பிடிப்பில் நடிக்கும்போது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் படப்பிடிப்பு முடிந்த அன்று மாலையே என்னுடைய கைகளில் அந்த பூக்களின் தடம் அச்சாக பதிந்திருக்கும். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு எனது கைகளில் இந்த பூக்களின் அச்சுப்பதிவு இருந்தது. ஒருவேளை இது நிரந்தரமாக போகவே போகாதோ என்று கூட நான் நினைத்தேன். அதேசமயம் மேக்கப்பில் அவற்றை சரி செய்து நடித்து வந்தேன். ஆனால் நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக அது மறைந்து விட்டது” என்று கூறியுள்ளார் சமந்தா.