பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் |
யசோதா திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் அடுத்ததாக, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சாகுந்தலம். புராண கால கதையான சாகுந்தலத்தை தழுவி உருவாகியுள்ள இந்த படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தை பிரபல தெலுங்கு கமர்ஷியல் இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா.
அப்படி ஒரு நிகழ்வில் சமீபத்தில் அவர் பேசும்போது,”இந்த படத்திற்காக தினசரி எனது கைகளில் மலர்களை சுற்றியவாறு நடிக்க வேண்டி இருந்தது. படப்பிடிப்பில் நடிக்கும்போது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் படப்பிடிப்பு முடிந்த அன்று மாலையே என்னுடைய கைகளில் அந்த பூக்களின் தடம் அச்சாக பதிந்திருக்கும். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு எனது கைகளில் இந்த பூக்களின் அச்சுப்பதிவு இருந்தது. ஒருவேளை இது நிரந்தரமாக போகவே போகாதோ என்று கூட நான் நினைத்தேன். அதேசமயம் மேக்கப்பில் அவற்றை சரி செய்து நடித்து வந்தேன். ஆனால் நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக அது மறைந்து விட்டது” என்று கூறியுள்ளார் சமந்தா.