நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தமிழ் இசை அமைப்பாளர்கள் தனித்தனியாக பொது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நேரடி இசை நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் இசை அமைப்பாளர்கள் வித்யாசாகரும், விஜய் ஆண்டனியும் அடுத்தடுத்த நாட்களில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 20ம் தேதி வித்யாசாகரும், 21ம் தேதி விஜய் ஆண்டனியும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். தனித்தனி இசை நிகழ்ச்சி என்றாலும் நடத்தப்படும் இடம், நடத்தும் அமைப்பு ஒன்றுதான். இரு நிகழ்ச்சிகளிலும் முன்னணி பாடகர்கள், பாடகிகள் பாடுகிறார்கள், முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.