வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

நடிகை சமந்தா, விஜய் தேவர கொண்டவுடன் நடித்த குஷி படத்திற்கு பிறகு தெலுங்கில் தான் தயாரித்திருந்த சுபம் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அடுத்து மா இண்டி பங்காரம் என்ற படத்தை தயாரித்து, கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் ஒரு ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார் சமந்தா. இதற்கிடையில் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை சமந்தா காதலிப்பதாக தொடர்ந்து சோசியல் மீடியாவில் பரபரப்பு செய்தி வெளியாகி கொண்டு வருகிறது. என்றாலும் அவர் இது குறித்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் சமந்தா, தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் தான் சந்தித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதோடு, நாம் எதைப் பற்றி பேச தேர்வு செய்கிறோமோ, அதுவே நாம் வடிவமைக்கும் பொருளாக மாறுகிறது என்றும் ஒரு பதிவு போட்டு உள்ளார் சமந்தா.