ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படத்தை இயக்கப் போவது மகிழ் திருமேனி என எப்போதோ செய்திகள் வெளிவந்துவிட்டது. முதலில் அப்படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் கூட அவரது சமூக வலைதளங்களில் 'அஜித் 62' என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனக்கும், அஜித்திற்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தான் எழுதிய கதையின் இரண்டாவது பகுதி தயாரிப்பாளருக்குப் பிடிக்கவில்லை, மகிழ் திருமேனி படத்தை இயக்குவது மகிழ்ச்சிதான் என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும், அஜித் 62வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் அஜித்தின் அப்பா மறைவு காரணமாகக் கூட அறிவிப்பு தள்ளிப் போயிருக்கலாம். ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும், மே மாதம் ஆரம்பமாகும் என்றுதான் படத்தைப் பற்றித் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதே சமயம் படத்தின் திரைக்கதையை மகிழ் திருமேனி இன்னும் முழுவதுமாக எழுதி முடிக்கவில்லை என்று கூட சொல்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு ரூம் போட்டுக் கொடுத்தும் தாமதப்படுத்துகிறார் என்கிறார்கள். அவர் தரப்பில் ஓகே என்று சொன்ன பிறகு, படத்தின் திரைக்கதை சம்பந்தப்பட்டவர்களுக்கும் திருப்தி என்றால்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் ஒரு தகவல் கோலிவுட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறது.