நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கடந்த பல மாதங்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் தற்போது நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதன் காரணமாக ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளராக அவர் உருவெடுத்திருக்கிறார். இந்த நிலையில் அரசியல் கட்சிகளை சார்ந்த பல தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் அஜித் குமாரும் , அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியிருக்கிறார். இதுகுறித்த தகவலை அதிமுகவினர் வெளியிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் தந்தை மறைவை ஒட்டி அவரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த தலைவர்களில் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.