ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கடந்த ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவின் கவனத்தை திருப்பிய படம் 'காந்தாரா'. கன்னடத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 9 கோடியில் தயாரான படம் 400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து, கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் இதனை தயாரித்திருந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று ஏற்கெனவே படத்தின் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி அறிவித்திருந்தார். இதற்காக கர்நாடகாவின் காடுகளுக்கு சென்று ஆய்வுகள் நடத்தி திரும்பினார்.
தற்போது 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் தொடங்கி விட்டதாக தெரிவித்திருக்கிறார். உகாதி திருநாளையொட்டி ரிஷப் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், “காந்தாரா படத்தின் எழுத்துப் பணிகள் தொடங்கியுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே நிறுவனம், “உகாதி மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எழுத்துப்பணி தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இயற்கை உடனான உறவை வெளிப்படுத்தும் மற்றொரு வசீகரிக்கும் கதையை உங்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம். மேலும் பல அப்டேட்டுக்காக காத்திருங்கள்” என பதிவிட்டுள்ளது.
“தற்போது வெளியாகியிருப்பது 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம் தான். கதைப்படிப் பார்த்தால் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். படத்தில் இடம்பெற்ற தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும் கதைதான் அடுத்த பாகத்தில் இருக்கும்” என இரண்டாம் பாகம் குறித்து ஏற்கெனவே ரிஷப் ஷெட்டி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.