மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவிலிருந்து பங்கெடுத்துக் கொண்ட ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவிலும் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற குறும்படத்திற்கு சிறந்த டாக்குமென்டரி படம் என்கிற பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற டாக்குமென்டரி படம் முதுமலை யானைகள் பராமரிப்பு முகாமில் அனாதையாக வந்த ரகு மற்றும் பொம்மி என்கிற இரண்டு யானைகளை பராமரித்து வளர்த்த பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியரின் அர்ப்பணிப்பு உணர்வு, யானைகளிடம் அவர்கள் காட்டும் பாசம் ஆகியவை குறித்து உணர்வு பூர்வமாக உருவாக்கப்பட்டு இருந்தது.
அதேசமயம் இந்த டாக்குமென்ட்ரிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட அந்த சமயத்தில் இந்த படத்தின் நாயகனாக நடித்திருந்த பொம்மன் கூறும்போது சமீபத்தில் தர்மபுரி அருகில் உள்ள பாலக்கோடு பகுதியில் மின்சாரம் தாக்கி இறந்த யானைகளின் இரண்டு குட்டிகள் பொதுமக்களால் துரத்தி அடிக்கப்பட்டன என்றும் அவற்றை தேடி கண்டுபிடித்து ரகு, பொம்மி யானைகளை வளர்த்தது போல வளர்க்கப் போகிறேன் என்றும் அந்த பொறுப்பை வனத்துறை தன்னிடம் ஒப்படைத்து இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே தர்மபுரி அருகே தாயை பிரிந்த குட்டி யானை ஒன்றை வனத்துறையினர் மீட்டு தற்போது அதை வளர்க்கும் பொறுப்பை பொம்மனிடமே வழங்கி உள்ளனர்.