'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி | அசத்துமா 'அஅ - அ' கூட்டணி? வெளியானது அறிவிப்பு | தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் | தீபாவளி தினத்தில் சூர்யாவும், கார்த்தியும் நேரடியாக மோதிக் கொள்கிறார்களா? | 'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! | நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம் | குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை |
'பொன்னியின் செல்வன்' படத்தை தயாரிக்க பலரும் தயங்கி கைவிட்டதை போன்று, 18ம் நூற்றாண்டில் வெள்ளையர்களை எதிர்த்து வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை படமாக்கவும் தமிழ் சினிமா தயங்கியது. இதற்கு காரணம் படத்தின் பட்ஜெட்தான்.
வீரபாண்டிய கட்டபொம்மன் கதை என்பது செவி வழி பாடல்களாகத்தான் இருந்தது. அதை முழுமையாக எழுதியவர் ம.பொ.சி. அவர் எழுதியதன் அடிப்படையில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகம் உருவாக்கப்பட்டது. அதில் சிவாஜி கட்டபொம்மனாக நடித்தார். பின்னர் அந்த நாடகத்தை சிவாஜி படமாக்க விரும்பினார். அவரால் இயலவில்லை. அதற்கும் முன்பாக அதாவது 1948ம் ஆண்டு செல்வம் பிக்சர்ஸ் நிறுவனத்தார் திரைப்படமாக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், தொடக்க நிலையிலேயே அது கைவிடப்பட்டது. அதன் பிறகு 1953ம் ஆண்டு ஜெமினி பிக்சர்ஸ் எஸ்.எஸ் வாசன் முயற்சி மேற்கொண்டார். அந்த முயற்சியும் கைகூடவில்லை.
1959ம் ஆண்டு இயக்குனர் பி.ஆர்.பந்துலு தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் துணிந்து படத்தை தயாரித்தார். திட்டமிட்டதை விட மூன்று மடங்கு பட்ஜெட் ஆனது. காரணம் படத்தை வண்ணத்தில் எடுத்ததும், போர் காட்சிகளுக்கு நிறைய செலவு செய்ததுமாகும். பி.ஆர்.பந்துலுவுக்கு உதவும் விதமாக சிவாஜி தனது சொந்த பொறுப்பில் படத்தை வெளியிட்டார். படம் வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது. அதில் சிவாஜிக்கு பெரும் லாபம் கிடைத்தது. அதன் ஒரு பகுதியை பி.ஆர்.பந்துலுவுக்கு கொடுத்த சிவாஜி, பாஞ்சாலங்குறிச்சியில் சிவாஜிக்கு பிரமாண்ட சிலை அமைத்தார்.
இந்த படத்தில் சிவாஜியுடன் ஜெமினி கணேசன், பத்மினி, எஸ்.வரலட்சுமி, ராகினி, வீ.கே.ராமசாமி, ஜாபர் சீத்தாராமன், ஓஏகே தேவர், உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார், வி.ஆர்.சுப்பாராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.