டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

'கண்ணும் கண்ணும் கொள்யைடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், சிம்பு நடிக்க உள்ள அவரது 48வது படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படம் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
சரித்திரப் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படும் இப்படத்திற்காக 100 கோடி ரூபாயை பட்ஜெட்டாக ஒதுக்கியுள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் சிம்புவிற்கு மட்டுமே சம்பளமாக 40 கோடி தருகிறார்கள் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். சிம்பு அவ்வளவு சம்பளத்தைக் கேட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் தகவல்.
அதிகபட்சமாக 10 கோடி மட்டுமே வாங்கிய சிம்பு, 'வெந்து தணிந்தது காடு' படத்திற்குப் பின் தனக்கு யார் அதிக சம்பளம் தருகிறார்களோ அவர்களது படத்தில் நடிக்க முடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள். சிம்புவிற்கு மட்டுமே 40 கோடியைக் கொடுத்துவிட்டு மீதியுள்ள 60 கோடியில் எப்படி சரித்திரப் படத்தைத் தயாரிக்க முடியும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.




