மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ஹிந்திப் படம் 'பதான்'. இப்படம் தற்போது 1000 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் கட்ட வெளியீட்டிலேயே உலக அளவில் 1000 கோடி வசூலைக் கடந்த முதல் ஹிந்தித் திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் மொத்த வசூலாக 623 கோடி, நிகர வசூலாக 516 கோடி, வெளிநாடுகளில் மொத்த வசூலாக 377 கோடியை வசூலித்துள்ளது 'பதான்'.
இதற்கு முன்பு 1000 கோடி வசூலித்த படங்களாக 'பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், டங்கல்' ஆகிய படங்கள் இருக்கின்றன. அவற்றில் டங்கல் மட்டுமே ஹிந்திப் படம், மற்ற மூன்று படங்களும் தென்னிந்திய மொழிப் படங்கள். சீனா வெளியீடு இல்லாமலேயே 'பதான்' படம் 1000 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
'டங்கல்' படம் இந்தியாவில் வெளியான ஆறு மாதங்களுக்குப் பிறகு சீனாவில் வெளியாகி அங்கு மட்டுமே 1300 கோடி வசூலைப் பெற்றது. முதல் கட்ட வெளியீட்டில் அப்படம் மொத்தமாக 700 கோடி மட்டுமே வசூலித்தது. அதனுடன் ஒப்பிட்டுத்தான் 'பதான்' படத்தின் வசூலை முதல் கட்ட வெளியீட்டிலேயே 1000 கோடி வசூல் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.