ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சமீபகாலமாக பிரபலங்களுடன் எப்படியாவது இணைந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிலர் தாங்களே சம்பந்தப்பட்ட பிரபலங்களுடன் நின்று செல்பி எடுத்துக்கொள்ளவும் விரும்புகிறார்கள். பல நேரங்களில் பிரபலங்களின் அனுமதி இல்லாமல் அவர்களுடன் செல்பி எடுக்க முயற்சிக்கும்போது அங்கே விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதும் உண்டு.
அப்படி சமீபத்தில் பிரபல பாலிவுட் பாடகரான சோனு நிகம் என்பவர் மும்பை செம்பூரில் நடைபெற்ற இசை கச்சேரி ஒன்றை முடித்துவிட்டு கிளம்பும்போது சிவசேனா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பிரகாஷ் படேர்பேக்கர் என்பவரின் மகனான ஸ்வப்னில் படேர்பேக்கர் என்பவர் அவருடன் இணைந்து வலுக்கட்டாயமாக செல்பி எடுத்துக் கொள்ள முயன்றார். ஆனால் அதை அனுமதிக்க சோனு நிகம் மறுத்தபோது ஏற்பட்டு தள்ளுமுள்ளுவில் அவரையும் அவரது பாதுகாவலர்களையும் ஸ்வப்னில் படேர்பேக்கர் தள்ளியதில் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்தார்,
இதைத்தொடர்ந்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் ஸ்வப்னில் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வு தொடர்பாக அவரது தந்தை எம்எல்ஏ பிரகாஷ் கூறும்போது, அப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் அது வருந்தத்தக்கது.. ஆனால் என் மகன் எந்த உள்நோக்கத்திலும் அப்படி செய்திருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
அதேசமயம் சோனு நிகம் தரப்பிலிருந்து தாங்கள் எந்த ஒரு புகாரையும் எம்எல்ஏ மகன் மீது அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. சோனு நிகம் தமிழில் ஜீன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், கிரீடம், சகுனி உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.