சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
நடிகர் ராமராஜன் உடன் ‛எங்க ஊரு பாட்டுக்காரன்' திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாந்தி பிரியாவிற்கு தற்போது 54 வயது. இவர் நடிகை பானுப்ரியாவின் சகோதரி. அப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளாக திரைப்படங்களில் இருந்து விலகி இருக்கும் சாந்தி பிரியா, தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாந்திபிரியா, இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதை குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இந்த நாட்டை தட்டி எழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.