தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
கன்னட திரையுலகில் இருந்து கேஜிஎப் என்கிற பிரம்மாண்ட படத்தை தொடர்ந்து, மீடியமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் காந்தாரா. இந்த படத்தில் நாயகனாக நடித்ததுடன் படத்தையும் இயக்கி இருந்தார் ரிஷப் ஷெட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்கும் படம் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமல்ல காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் காந்தாரா படத்தின் தயாரிப்பாளரே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் தமிழில் லெஜெண்ட் படத்தில் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக நடித்த ஊர்வசி ரவுட்டேலா ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் 'காந்தாரா-2 லோடிங்' என்கிற கேப்ஷனையும் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து காந்தாரா-2 படத்தில் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது போன்று செய்திகள் பரபரப்பாக பரவ ஆரம்பித்தன. ஆனால் காந்தாரா பட தயாரிப்பு நிறுவனத்தின் வட்டாரத்திலிருந்து வெளியான தகவலில், காந்தாரா-2ல் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக நடிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது..
“சமீபத்தில் ரிஷப் ஷெட்டி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்காக அவர் வந்திருந்த இடத்திற்கு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக ஊர்வசி ரவுட்டேலாவும் வந்திருந்தார். அப்போது ரிஷப் ஷெட்டி அங்கு இருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்திக்க விரும்பினார். ரிஷப் ஷெட்டியும் மகிழ்ச்சியுடன் ஊர்வசியை சந்தித்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி ரவுட்டேலா காந்தாரா-2 லோடிங் என்கிற வார்த்தையை குறிப்பிட்டதால்தான் இந்த அளவிற்கு அந்த செய்தி பரபரப்பாகிவிட்டது” என்று கூறியுள்ளார்கள்.