300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மீடியாக்களின் வருகை, குறிப்பாக யு-டியூப் சேனல்களின் ஆதிக்கம் பெருகிய பின்பு, தியேட்டர்களில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, படம் பார்த்துவிட்டு வரும் பார்வையாளர்களிடம் படம் குறித்த அவர்களது கருத்துக்களை, விமர்சனங்களை கேட்டு அவற்றை தங்களது சேனல்களில் ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் நல்ல படங்களுக்கு பிரச்சனை இல்லை. அதேசமயம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பல படங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான கோணத்தில் அந்த படத்தை பற்றி விமர்சனங்கள் வெளியாவதால் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து கேரள தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இதுபோன்ற மீடியாக்கள், யு-டியூப் சேனல்கள் தியேட்டருக்குள் நுழைந்து படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடம் கருத்து கேட்பதற்கு அதிரடியாக தடை விதித்துள்ளது கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். அதே சமயம் தியேட்டருக்கு வெளியே நின்று பொதுமக்களிடம் இதுபோன்ற சேனல்கள் கருத்து கேட்டால், அதில் நாங்கள் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது. இந்த புதிய உத்தரவின் மூலம் இனிவரும் நாட்களில் படங்களின் வசூல் கூடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.