நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். கமர்சியல் ஆக்சன் படங்களுடன் துப்பறியும் த்ரில்லர் படங்களையும் கொடுப்பதில் வித்தகரான இவரது இயக்கத்தில் கடந்த 2006ல் மலையாளத்தில் சிந்தாமணி கொல கேஸ் என்கிற படம் வெளியானது. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நடைபெறும் விசாரணையை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் லால் கிருஷ்ணா விராடியார் என்கிற பிரபல வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி நடித்திருந்தார்.
இந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஷாஜி கைலாஷ். இதிலும் சுரேஷ்கோபியே கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல கதாசிரியர் ஏ.கே.சாஜன் எழுதுகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகில் இருந்து ஒதுங்கியது போல காணப்பட்ட இயக்குனர் ஷாஜி கைலாஷ், கடந்த ஆறு மாதங்களில் கடுவா, காபா, அலோன் ஆகிய மூன்று படங்களை இயக்கி விட்டார்.
தற்போது பாவனா கதாநாயகியாக நடித்து வரும் ஹன்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு சிந்தாமணி கொல கேஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்குகிறார். இந்த படம் இவரது டைரக்ஷனிலேயே கடந்த 2008ல் தமிழில் நடிகர் ஆர்கே நடிக்க எல்லாம் அவன் செயல் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கேயும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.