300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். கமர்சியல் ஆக்சன் படங்களுடன் துப்பறியும் த்ரில்லர் படங்களையும் கொடுப்பதில் வித்தகரான இவரது இயக்கத்தில் கடந்த 2006ல் மலையாளத்தில் சிந்தாமணி கொல கேஸ் என்கிற படம் வெளியானது. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நடைபெறும் விசாரணையை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் லால் கிருஷ்ணா விராடியார் என்கிற பிரபல வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி நடித்திருந்தார்.
இந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஷாஜி கைலாஷ். இதிலும் சுரேஷ்கோபியே கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல கதாசிரியர் ஏ.கே.சாஜன் எழுதுகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகில் இருந்து ஒதுங்கியது போல காணப்பட்ட இயக்குனர் ஷாஜி கைலாஷ், கடந்த ஆறு மாதங்களில் கடுவா, காபா, அலோன் ஆகிய மூன்று படங்களை இயக்கி விட்டார்.
தற்போது பாவனா கதாநாயகியாக நடித்து வரும் ஹன்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு சிந்தாமணி கொல கேஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்குகிறார். இந்த படம் இவரது டைரக்ஷனிலேயே கடந்த 2008ல் தமிழில் நடிகர் ஆர்கே நடிக்க எல்லாம் அவன் செயல் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கேயும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.