புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவில் ரூ.100 கோடி வசூல் என்பதே பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில் ஒரு படம் ரூ.300 கோடி வசூலைப் பெறவது சாதாரண விஷயமல்ல. கடந்தாண்டு இரண்டு படங்கள் 300 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்திருந்தது. கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்', மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்கள்தான் அவை. 'விக்ரம்' படம் 400 கோடி வசூலையும், 'பொன்னியின் செல்வன்' படம் 500 கோடி வசூலையும் கடந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கு முன்பாக ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் 600 கோடி வசூலைப் பெற்றிருந்தது. அதற்கடுத்து விஜய் நடித்த 'பிகில்' படம் 300 கோடி வசூலைக் கடந்திருந்தது. ரஜினிகாந்தின் 'கபாலி, எந்திரன்' ஆகியவை 300 கோடி வசூலைப் பெற்றதாகவும் தகவல் உண்டு. தற்போது விஜய் நடித்த 'வாரிசு' படம் 300 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் இரண்டு படங்கள் 300 கோடி வசூலைப் பெற்றிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'வாரிசு' படத்துடன் வெளியான 'துணிவு' படத்தின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியிடப்படாத நிலையில் 'வாரிசு' படத்தின் 300 கோடி வசூலை நேற்று அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கொண்டாட ஆரம்பித்தனர் விஜய் ரசிகர்கள்.