36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் |
வினோத் இயக்கத்தில் விஷால், சுனைனா நடித்துள்ள ‛லத்தி' படம் டிச., 22ல் வெளியாகிறது. இதற்காக ஊர் ஊராக சென்று விளம்பரம் செய்கிறார் விஷால். கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், ‛‛இந்த படத்தில் முதல் முறையாக ஒரு இரண்டாம் நிலை காவலராக 8 வயது சிறுவனின் தந்தையாக நடித்துள்ளேன். விவசாயிகள் குறித்து சரியான திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை. அவர்களது பிரச்சனைகள் குறித்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் அதற்கான தீர்வுகளையும் கூற வேண்டும்.
எனது நண்பர் உதயநிதி அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களுக்காக சேவை செய்து வருவதும் அரசியல் தான் என்ற அடிப்படையில் நானும் அரசியலில் தான் இருக்கிறேன். சிறுபட்ஜெட் படங்களை தியேட்டர்களில் மக்கள் பார்ப்பது குறைவதால் நஷ்டம் அடைகின்றன. திருமணம் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.
இலங்கை அகதிகள் முகாமில் எனது திரைப்படங்களை திரையிட நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை. திருமணம் குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் அறிவிக்கிறேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.