இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்கிற படத்தில் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.. ஆனாலும் சில வருடங்கள் கழித்த பிறகு தமிழில் அவர் நடித்த பேட்ட திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து விஜய், தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னேறினார் மாளவிகா மோகனன். அதன் பிறகு பெரிய அளவில் மலையாள படங்களில் நடிக்காத மாளவிகா மோகனன் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது கிறிஸ்டி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் மேத்யூ தாமஸ் 20 வயதே ஆனவர்.. அந்தவகையில் தன்னைவிட ஒன்பது வயது குறைந்த இளம் நடிகருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிப்பது ஆச்சரியமான விஷயம்தான். அதேசமயம் இந்த படத்தின் கதையை பிரபல கதாசிரியர்கள் பென்யமின் மற்றும் ஜிஆர் இந்துகோபன் என்கிற இரண்டு பிரபல எழுத்தாளர்கள் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆல்வின் ஹென்றி இயக்குகிறார்
கதைக்கு இந்த வயதிற்குபட்ட கதாபாத்திரங்கள் தேவைப்பட்டுள்ளன என்பதாலும் பிரபல கதாசிரியர்கள் என்பதாலும் மாளவிகா மோகனன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப்படம் தயாராகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள பூவார் மற்றும் மாலத்தீவுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.