'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
திரில்லர் மற்றும் துப்பறியும் கதைகளை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் அறிவழகன் சமீபகாலமாக நடிகர் அருண்விஜய் வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார். இந்தநிலையில் தற்போது சபதம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்கிறார்.
கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஈரம் படத்தில் இயக்குனராக அறிமுகமான அறிவழகன், அந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆதிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை பெற்றுத் தந்தார். இந்த நிலையில் தற்போது சபதம் படத்திற்காக இவர்கள் இணைந்து உள்ளனர். இந்தப்படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது.
அதுமட்டுமல்ல ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமனும் இந்த சபதம் படத்திற்காக இவர்களுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் கதைக்கு ஆதி தான் சரியான நபராக இருந்தார்.. அருண்விஜய்க்கு அடுத்ததாக ஆதியுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ரொம்பவே வசதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அறிவழகன். இந்த படம் ஹாரர் திரில்லர் ஆக உருவாகிறது.