போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் |
கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீதான இமேஜ் சரிந்துள்ளது. அவர் தங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியும் எதிர்பார்த்து வருகிறார்.
இதுவரையில் விஜய் பேசிய போதெல்லாம் 'திமுக என் அரசியல் எதிரி, பா.ஜ., என் கொள்கை எதிரி' என்றே பேசி வந்திருக்கிறார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இதனிடையே, ஆந்திர அரசியல் வட்டாரங்களில் ஜன சேனா கட்சித் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியதாக சொல்லப்படுகிறது.
தனது அண்ணன் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் கட்சி ஆரம்பித்த போது தேர்தலில் தனித்து நின்றதால்தான் கட்சி தோல்வியைத் தழுவியது. கூட்டணியில் நிற்கும் போதுதான் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது என தன் கட்சியைப் பற்றி குறிப்பிட்டுப் பேசியதாகத் தெரிகிறது.
தன்னை முதல்வர் வேட்பாளர் என்றே தனது கட்சித் தொண்டர்களிடம் பேசி வந்த விஜய், அதை விட்டுவிட்டு கூட்டணி சேர்ந்து, வேறொருவர் முதல்வர் ஆக ஆதரவு கொடுப்பாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.