விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? |
தமிழ் சினிமாவில் காமெடியன், ஹீரோ மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் வடிவேலு. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரீ என்ட்ரி கொடுத்திருப்பவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாகவும், மாமன்னன் படத்தில் குணச்சித்திர வேடத்திலும், சந்திரமுகி- 2 படத்தில் மீண்டும் காமெடியனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் முதன்முறையாக ஒரு படத்தில் வடிவேலு நெகட்டிவ் வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு என்ற படத்தை இயக்கிய ராம் பாலா அடுத்தபடியாக ஜிவி.பிரகாஷை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். அந்த படத்தில் தான் வடிவேலு நெகட்டிவ் வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்திற்காக தனது பாடிய லாங்குவேஜ் பக்காவாக மாற்றி முரட்டுத்தனமாக முகபாவணையுடன் நடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம் வடிவேலு.