எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த இந்தப்படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது. உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்திற்கு தங்களது பாராட்டுக்களையும் இந்த படம் குறித்த பிரமிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இதற்கெல்லாம் திருஷ்டி பொட்டு வைத்தது போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம்பெற்ற வராஹ ரூபம் என்கிற பாடல் தாய்க்குடம் பிரிட்ஜ் என்கிற மலையாள இசைக்குழுவினர் உருவாக்கிய நவரசம் என்கிற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்கிற சர்ச்சை கிளம்பியது.
காந்தாரா படத்திற்கு இசை அமைத்த அஜனீஷ் லோக்நாத் இதை மறுத்து இருந்தாலும் தாய்க்குடம் பிரிட்ஜ் இதுகுறித்து நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறியிருந்தது. சொன்னதுபோலவே கோழிக்கோடு செஷன்ஸ் கோர்ட்டில் காந்தாரா படத்தில் இருந்து வராஹ ரூபம் பாடலை நீக்க வேண்டுமென வழக்கும் தொடுத்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வராஹ ரூபம் பாடலை காந்தாரா படத்திலிருந்து, தியேட்டர்களிலோ வேறு எந்தவிதமான வெளியீட்டு தளங்களிலோ பயன்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.