இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'காந்தாரா'. கன்னடத்தில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹிந்தி, தமிழ், தெலுங்கிலும், மூன்று வாரங்களுக்குப் பிறகு மலையாளத்திலும் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிட்டார்கள். சுமார் 400 கோடி வசூலை இந்தப் படம் பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்ற 'வராஹ ரூபம்' என்ற பாடல் தங்களது 'நவரசம்' பாடலின் 'திருட்டு வடிவம்' என அப்பாடலை உருவாக்கிய தைக்குடம் பிரிட்ஜ் என்ற மலையாள இசைக்குழு சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்பின் அந்தப் பாடலுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் யு டியுபில் அப் பாடல் நீக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 'காந்தாரா' படம் ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி தளத்தில் அப்பாடலை அமேசான் நிறுவனம் நீக்கியுள்ளது.
இது குறித்து தைக்குடம் பிரிட்ஜ் இன்ஸ்டாகிராம் தளத்தில், “அமேசான் பிரைம் நிறுவனம் 'காந்தாரா' படத்தில் இடம் பெற்ற 'நவரசம்' பாடலின் திருட்டு வடிவத்தை நீக்கியுள்ளது. நீதி நிலைத்தது. உரிமைக்காகப் போராடிய எங்களுக்கு ஆதரவளித்த, இசையுலகத்தினர், ரசிகர்கள், மீடியா ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
'வராஹ ரூபம்' பாடலை சமீபத்தில்தான் பட நிறுவனம் யு டியூபிலிருந்து நீக்கியது. தற்போது ஓடிடி தளத்தில் அதற்குப் பதிலாக வேறு ஒரு பாடலை இணைத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பாடல் ஈர்ப்பாக இல்லை, மீண்டும் பழைய 'வராஹ ரூபம்' பாடலையே கொண்டு வாருங்கள் என படக்குழுவினருக்கு ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.