2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
டிரைய்டன் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல்கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின் குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் செம்பி. தன் பேத்தியை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ஒரு மலைவாழ் பாட்டியின் கதை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:
ஒரு படம் பெரிய படமா, சின்ன படமா என்பது காலம் கடந்து பேசப்படுவதில் தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் 16 வயதினிலே படத்தை பேசுகிறார்கள், அது தான் பெரிய படம். இத்தனை கோடியில் எடுத்தோமே அதன் பெயர் மறந்துபோய்விட்டது என்றால் அது பெரிய படம் இல்லை. 16 வயதினிலே படத்தில் நான் நடிக்கும்போது அதை சின்னப் படம் என்றார்கள். டிஸ்கோவெல்லாம் ஆடி நல்ல கமர்ஷியல் படங்களில் நடிக்கும்போது கோவணம் கட்டி நடிக்கலாமா என்று கேட்டார்கள். ஆனால் இப்போதும் அதை பெரிய படமாக கொண்டாடுகிறோம்.
இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். தப்பு நடக்கும்போது அதை தட்டி கேட்க வேண்டும் என்று சொல்கிற படம். தப்பு நடக்கும்போது நாம் கேள்வி கேட்க தயங்குவதை தைரியமாக பேசியுள்ளதென்பதால் எனக்கு மிகவும் பிடித்த படம். ரசிகர்கள் நல்ல படத்தை பாராட்ட வேண்டும். படம் நல்லாயில்லை என்றாலும் தைரியமாக சொல்ல வேண்டும். அப்போது தான் சினிமா வளரும். நல்ல படத்திற்கு என் ஆதரவு எப்போதும் இருக்கும்.
என்னை விட பெரும் திறமையாளர்கள் என் கண் முன்னால் வாய்ப்பில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள், அதனால் நல்லவற்றை பாராட்ட தயங்காதீர்கள். கற்றுக்கொள்ள தயாராக இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.