26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். அடுத்ததாக அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்காமல் இருந்த ரகுல் பிரீத் சிங் இந்தியன்-2 படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அதேசமயம் தெலுங்கிலும் கூட மிகப்பெரிய இடைவெளி விட்டுள்ள ரகுல் பிரீத் சிங் தொடர்ந்து பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் அவருடன் ரிலேஷன்ஷிப்பிலும் இருக்கிறார் என்பதும் ஏற்கனவே வெளியான செய்தி தான்.
இந்த நிலையில் பாலிவுட்டில் அடுத்ததாக எதிர்பார்க்கப்படுவது இவர்கள் இருவரின் திருமணம் தான். இதுகுறித்து அவர்கள் இருவரும் எதுவும் வாய் திறக்காத நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் இதுபற்றி கூறும்போது, ‛‛எந்த ஒரு காதல் உறவுக்கும் இனிமையான முடிவு என்பது திருமணம் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 2023ல் அவர்கள் திருமணம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் அது எப்போது என்பதை உரிய நேரம் வரும்போது ரகுல் பிரீத் சிங் தான் அறிவிப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.




