வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் கடந்த 30ம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெற்றுள்ள பெரிய பழு வேட்டரையர் வேடத்தில் நடிக்க தான் விருப்பம் தெரிவித்தாக கூறினார். அதைகேட்ட மணிரத்னம், அப்படி ஒரு வேடத்தில் ரஜினியை நடிக்க வைத்து அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக நான் விரும்பவில்லை என்பதற்காகவே அந்த இடத்தில் அவரை நடிக்க வைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து மணிரத்னத்தின் தளபதி படத்தில் நடித்தபோது நடைபெற்ற சில சம்பவங்களையும் அந்த மேடையில் பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு மணிரத்னம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை ரஜினிக்கும் பிடித்து விட்டதால் நடிக்க தயாராக இருப்பதாகவும் புதிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் தளபதி படத்தை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியும் மணிரத்னமும் இணையப் போகிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு ரஜினி - மணிரத்னம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




