100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் கடந்த 30ம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெற்றுள்ள பெரிய பழு வேட்டரையர் வேடத்தில் நடிக்க தான் விருப்பம் தெரிவித்தாக கூறினார். அதைகேட்ட மணிரத்னம், அப்படி ஒரு வேடத்தில் ரஜினியை நடிக்க வைத்து அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக நான் விரும்பவில்லை என்பதற்காகவே அந்த இடத்தில் அவரை நடிக்க வைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து மணிரத்னத்தின் தளபதி படத்தில் நடித்தபோது நடைபெற்ற சில சம்பவங்களையும் அந்த மேடையில் பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த். இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு மணிரத்னம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை ரஜினிக்கும் பிடித்து விட்டதால் நடிக்க தயாராக இருப்பதாகவும் புதிய ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் தளபதி படத்தை தொடர்ந்து 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியும் மணிரத்னமும் இணையப் போகிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் அதன் பிறகு ரஜினி - மணிரத்னம் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.