இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ்சிவனும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் 4 மாதங்கள் ஆன நிலையில் கடந்த 9ம் தேதி அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இது குறித்த தகவலை விக்னேஷ் சிவன் வெளியிட்டதிலிருந்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் விக்னேஷ் சிவன் இரண்டு பதிவுகள் போட்டு உள்ளார்.
அதில், ‛உங்களிடம் அக்கறை செலுத்துபவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். அவர்கள்தான் எப்போதும் உங்களுடனே இருப்பார்கள். யார் உங்களுடன் சிறப்பாக இருக்கிறார்களோ அவர்கள்தான் உங்களுக்கானவர்கள்' என்று தெரிவித்திருக்கிறார். இன்னொரு பதிவில், ‛எல்லாம் சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும். அதுவரைக்கும் பொறுமையுடனும் நன்றியுடனும் இருங்கள்' என்று பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.