பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

கார்த்தி, ராஷி கண்ணா நடித்துள்ள சர்தார் படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 21ம் தேதி வெளிவருகிறது. இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இதனை இயக்கி உள்ளார். இது தொடர்பாக கார்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழில் உளவாளிகள் பற்றிய கதைகள், ஜேம்ஸ்பாண்ட் மாதிரியான படங்கள் அதிகமா வந்ததில்லை. கமல் சார் விக்ரம் மாதிரியான படங்கள் செய்திருக்கிறார். அதுவும் சர்வதேச உளவாளிகளின் கதை. நம்ம ஊர்ல ஒருத்தன் உளவாளியா இருந்தா எப்படி இருப்பான், அவன் செயல்பாடு எப்படி இருக்கும்? அப்படிங்கறதுதான் இந்தப் படம். உளவாளியா இருக்கிறவன் என்ன பண்றான், எந்த விஷயத்துக்காக அவர் உளவு வேலை பார்க்கிறான் என்பதுதான் இந்த படத்தின் ஹைலைட்.
இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கேர்டரில் நடித்திருக்கிறேன். நிறைய கெட்அப்கள் போட்டிருக்கிறேன். அப்பாவாக நடிக்கத்தான் மிகவும் சிரமப்பட்டேன். ஆயுத படை போலீஸ் என்பதுதான் நிஜ கேரக்டர் மற்றவை அந்த போலீஸ் போடுகிற வேஷங்கள்தான். என்றார் கார்த்தி.
பேட்டியின் போது பொன்னியின் செல்வனுக்கு பிறகு சம்பளத்தை உயர்த்தி விட்டீர்களாமே என்ற கேட்டதற்கு ”படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்த நான் தயார். ஆனால் யார் தருவார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் ஒழுங்காக வந்தாலே போதும். என்னை பொறுத்தவரை சம்பளத்தை பற்றி பெரியதாக கருதுவதில்லை. மக்களை மகிழ்விக்க வைக்கும் நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதே. அண்ணன் மாதிரி வித்தியாசமான படங்களில் நடித்து விருதெல்லாம் வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதுமாதிரி படங்கள் எனக்க அமையவில்லை. ஜாலியான என்டர்டெயின்மென்ட் படங்கள்தான் அமைகிறது” என்றார்.




